இலங்கையின் கடற்பரப்பில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக அவுஸ்திரேலிய அரசு கண்காணிப்பு கப்பல் ஒன்றை வழங்கியுள்ளது.
இந்த கப்பல் சட்டவிரோத மீன்பிடி செயல்பாடுகளைத் தடுக்கவும் எல்லைப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் ஆட்கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கவும் பழுதான படகுகளில் தவிக்கும் மீனவர்களை மீட்கவும் இலங்கைக்கு உதவியாக இருக்கும் என அவுஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி தெரிவித்திருக்கிறார்.