”போலந்தில் எங்கும் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை” என ரஷ்யா தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டு வான்வெளியில் நள்ளிரவில் 19 முறை ஆளில்லா விமானங்கள் பறந்ததை போலந்து இராணுவம் பதிவு செய்துள்ளதாக போலந்து பிரதமர் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளது.
“உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட யுஏவி ஆளில்லா விமானங்கள் அதிகபட்சம் 700 கி.மீ வரைதான் செல்லும், அதைத் கடக்காது.” “எனினும், இந்த விவகாரம் குறித்து போலந்து பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஆலோசனை செய்ய தயாராக இருக்கிறோம்.” என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.