யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கோட்டை நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (23) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்ப மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அர்ச்சுனா, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.



