மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி ஒன்றுக்கு ஏற்பாடு!

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின் தலைமையகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாவீரர் வாரத்தை முன்னிட்டு குறித்த கட்சியை தேசிய அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.  இதனிடையே, கட்சியின் தலைமைச் செயலகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தலைமையில் புதிய கட்சி உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளமையை ஜெயா சரவணாவும் குறித்த ஊடகத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.