எரிவாயு கப்பல் இலங்கைக்கு வருகை
எரிவாயு கப்பலொன்று 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 2.5 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்தி எரிவாயுவை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனூடாக மேலும் 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.