விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை அம்பிகாவின் கருத்து பிரதிபலிக்கின்றது! வெளிவிவகார அமைச்சு

அம்பிகாவின் கருத்து பிரதிபலிக்கின்றது

அம்பிகாவின் கருத்து பிரதிபலிக்கின்றது: இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்து தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்ப தற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். எனவே, அவரது குற்றச்சாட்டுகளை நிரா கரிப்பதாகவும், ஏற்கனவே கொரோனாத் தொற் றால் அனைவரதும் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ள நிலையில், குறித்த சலுகையை இலங்கை இழந்தால், அதனால் பல இழப் புக்கள் ஏற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வழங்கி வருகின்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இன ரீதியாக சமூகங்களுக்குப் பாகுபாடு காட்டப்படுகின்றமை தொடர்பில் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங் களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்தோடு சிங்கள பெளத்த தேசியவாதம் மற்றும் இராணுவ மயமாக்கல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில ளித்த வெளிவிவகார அமைச்சு, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங் கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் வசம் இருந்த தனியார் காணிகளில் 92 வீதத்துக்கும் அதிகமானவை காணி உரிமையாளர்களிடம் கையளிக் கப்பட்டுள்ளன எனவும் ஏனையவற்றை கையளிக்கும் நடவடிக்கை இடம்பெறுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Tamil News