ஓமானில் இலங்கைத் தூதரக பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் மரணம்

ஓமானில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இங்கு தங்க வைக்கபட்டிருந்தவர்களில் சிலர் அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.