கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்து போட்டியிட தீர்மானம் – தர்மலிங்கம் சித்தார்த்தன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனித்து போட்டியிட இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று(10) நண்பகல் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.