இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட அப்பாச்சி உலங்கு வானூர்தி

உலகின் அதிநவீன இராணுவ உலங்கு வானூர்திகளில் ஒன்றான போயிங் நிறுவனத்தின் AH-64 E ரக உலங்கு வானூர்திகள் இன்று இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகை உலங்கு வானூர்திகள் அப்பாச்சி என்றழைக்கப்படும்.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் நிறுவனத்தின் AH-64 E  ரகத்தைச் சேர்ந்த 22 உலங்கு வானூர்திகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு செப்டெம்பரில் கையெழுத்திட்டது.

இந்த உலங்கு வானூர்தகளில் முதல் 4 கடந்த ஜுலை 27ஆம் திகதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் 4 உலங்கு வானூர்திகள் உப்படைக்கப்பட்டன.

முதல் கட்டமாக இன்று (03.09.) பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் எட்டு அப்பாச்சி உலங்கு வானூர்திகளை இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா முறைப்படி தேங்காய் உடைத்து, பொட்டு வைத்து இந்திய விமானப்படையுடன்  இணைக்கப்பட்டன.

பல கட்டங்களாக மீதமுள்ள 14 அப்பாச்சி ரக உலங்கு வானூர்திகள் அடுத்த ஆண்டிற்குள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் அதிநவீன போர் உலங்கு வானூர்தியான அப்பாச்சி தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் விமானப்படையில் பிரதான உலங்கு வானூர்தியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அப்பாச்சி ரக உலங்கு வானூர்திகள் ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக இணைக்கப்படுவதாக  இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

Appachchi இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட அப்பாச்சி உலங்கு வானூர்திஇரண்டு டர்போஷாஃப்ட் ரக என்ஜின்களைக் கொண்ட இந்த உலங்கு வானூர்தி மணிக்கு 289 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியது.

அனைத்து விதமான காலநிலைகளிலும் செயற்படும் திறன் மிக்க அப்பாச்சி உலங்கு வானூர்திகளில் இலக்குகளை கண்டறிய பின்தொடர, தாக்குதல் தொடுக்க ஏதுவாக லேசர், இன்ஃபராரெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அப்பாச்சி உலங்கு வானூர்தியால் ஒரே நிமிடத்தில் அதிகபட்சமாக 2,800 அடி உயரம் வரை மேல்நோக்கி பறக்க முடியும்.

மிக அதிகளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அப்பாச்சி உலங்கு வானூர்திகள், ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தது.

துப்பாக்கிகள் மட்டுமன்றி, அதிநவீன ரொக்கெட்டுகள், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்த உலங்கு வானூர்திகள், இரவு நேரத்திலும் அதி விரைவாக தாக்குதல் நடத்த வல்லது.

இந்திய விமானப்படையின் முக்கிய போர் உலங்கு வானூர்தியாக விளங்கி வரும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக் 35 ரக உலங்கு வானூர்திகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்த ஆண்டிற்குள் அந்த இடத்தை அப்பாச்சி நிரப்பும் என எதிர்வு கூறப்படுகின்றது.