பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. பொதுச்செயலாளரர்

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெப் நல்லெண்ண தூதர் என தரப்பட்ட பதவியைப் பறிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துள்ளது.

ஐ.நா.வின் அங்கமான யுனிசெப் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா நியமனம் செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்து அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளை பிரியங்கா கூறி வருவதாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

ஆனால் இந்த கோரிக்கையை ஐநா.சபை நிராகரித்து விட்டது. ஐநா.சபையின் முகவர்கள் தங்கள் சொந்த ஆளுமையினால் பேசுகிறார்கள் என்றும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துகளை அவர்கள் வெளியிடும் உரிமை உள்ளது என்றும் ஐநா.சபையின் பொதுச்செயலாளரர் அந்தோணியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபை சார்பில் அவர்கள் கருத்துகளை வெளியிட்டால் அதன் நடுநிலையை மீற வேண்டாம் என்று வலியுறுத்துவோம் என்றும் ஐநா.பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.