‘புரட்சி ஒன்றிற்கு தயாராகுங்கள்’ – மாத்தறையில் சஜித்

ஒக்டோபர் புரட்சிக்கு அனைவரும் தயாராகுங்கள். உறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். எவரும் அச்சம் கொள்ள வேண்டாமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சாதாரண மக்களை மன்னர்களாக்கும் வகையில் எமது சமூக, அரசியல், பொருளாதார கொள்கைகளும், செயற்பாடுகளும் அமையும். ‘இலங்கைக்கு முன்னுரிமை’ என்பதை மையப்படுத்தியே எமது பயணம் அமையும். மக்களுடன் பயணிக்கும் தருணத்தில் மக்களுக்காக நடுவீதியில் உயிர்துறக்கவும் நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்ைகயில்,

இன்னும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. எவரும் அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியாக தேர்தலில்

போட்டியிடுவேன். நாட்டை பலப்படுத்தும், அபிவிருத்தி செய்யும், தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே எமது பயணம் அமையும்.

பெரும் தலைமைத்துவத்தை நான் நாட்டுக்காக பெற்றுக்கொடுக்க பார்க்கின்றேன். இலங்கைக்கு பெரும் தலைமைத்துவத்தை வழங்கி உலகை வெற்றிக்கொள்வோம். தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், நாட்டை ஒற்றுமைப்படுத்தும். நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்வைக்கப்போம்.

அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கும் நிலையை உருவாக்குவோம். சகவாழ்வு, சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டின் மனிதவுரிமைகளை பாதுகாப்போம். அனைவருக்கும் பேசும், அரசியல் செய்யும் உரிமையை ஏற்படுத்தியுள்ளோம். இன்று எழுந்துள்ள காலமென்பது நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் காலமாகும். வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்வுப்படுத்தும் உறுதிப்படுத்தும் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் வருமானத்தை அதிகரிப்போம்.

இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் அந்த தீர்மானத்தை எடுக்கும் போது நான் இரவு, பகல் பாராது பணிகளை முன்னெடுத்து பலமான நாட்டை உருவாக்குவேன்.

இலங்கைக்கு அனைத்திலும் முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணிப்போம். அனைவருக்கும் பிரதிபலனைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

மாடமாளிகையில் இருக்காது பாதைக்கு இறங்கி வீடு வீடாக சென்று எமது பணிகளை முன்னெடுப்போம். இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தகுதியுடைய இளைஞர் சமூகத்திற்கு தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நவீனமயப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தை விரைவாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். நாம் நாட்டுக்காக சாதாரண மக்களாக வாழ தயார். ஊழலுக்கு இடமளிக்க முடியாது. ஊழல்களால் தான் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைகிறது என்றார்.