வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக பறந்த ட்ரோன் கமரா

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக 19.08 அன்று இரவு ட்ரோன் கமரா ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8. மணி தொடக்கம் 8.15 மணிக்கிடையில் இந்தக் கமரா பறந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த ட்ரோன் கமரா தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வளாகத்திற்குள் இவ்வாறான ட்ரோன் கமராக்களை கண்டால் சுட்டு வீழ்த்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.