அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய துறந்துள்ளார் – பசில்

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ரஜபக்சா தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கோத்தபயாவின் சகோதரருமான பசில் ராஜபக்சா இன்று (08) தெரிவித்துள்ளார்.

தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோத்தபயா கடும் போக்காளர் அல்ல ஆனால் அவரை அவ்வாறு சித்தரிப்பதற்கு எதிர்க்கட்சிகள் முற்படுகின்றன. எதிர்வரும் 11 ஆம் நாள் இடம்பெறும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் நாம் அரச தலைவர் வேட்பாளரை அறிவிக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.