மகிந்தவுடன் டக்ளஸ்,வரதராஜ பெருமாள் சந்திப்பு

சந்திப்பில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கணேசனிடம் இது தொடர்பாக வினவியபோது அவர் கீழ்வருமாறு விபரமளித்தார்,

நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுவதற்காக நடப்பு அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதுவரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் வெற்றி இலக்கினை மாத்திரம் இலக்காக கொண்டு தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்குவதை அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

டக்ளஸ் தேவானந்தா,வரதராஜ பெருமாள் , ,டியூ குணசேகர,திஸ்ஸ விதாரண,ராஜா கொல்லூரே , அருண் தம்பிமுத்து, ரி.சிறீதரன்,பி.உதயராசா,  உட்பட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.