உடற்சோதனையின் பின்னரே நல்லூரானை தரிசிக்கலாம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உடற்சோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண் பக்தர்களை சோதனைக் கூடத்திற்குள்ளும், ஆண் பக்தர்களை வெளியிலும் உடற் சோதனை செய்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் எடுத்துச் செல்லும் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.