இன்டபோலினால் தேடப்படும் நபர் கோதபயாவின் நிகழ்வில்

இன்டபோல் பொலிசாரால் தேடப்படும் ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் நடைபெற்ற கோத்பயாவின் “வெளிச்சம்“ என்ற பிரசார நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மிக் 27 ரக விமானங்களின் கொள்வனவின் போது, 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டு இவரின் மேல் சுமத்தப்பட்டிருந்தது.

Uthayanka 2 இன்டபோலினால் தேடப்படும் நபர் கோதபயாவின் நிகழ்வில்2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யக் கோரி இன்டபோல் சிவப்பு எச்சரிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.