இதேவேளை யுலை 21ம் நாளன்று பிரான்சில் கறுப்பு யுலை நினைவேந்தலும், உரையாடலும் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கனடாவில் கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்புதலும் முன்னெடுக்கபடவுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைத்தீவில் சிறிலங்கா ஆட்சியாளர்களினால், சிங்கள அரசினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கறுப்பு யூலை – 1983 தமிழினப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள் தொட்டு விட்டன.
காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன.
கறுப்பு யூலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.