தென்சூடானில், சிறிலங்கா பொலிசாருக்கு சேவை நீடிப்பு வழங்க ஐ.நா. மறுப்பு

தென்சூடானில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவையை நீடிக்க அங்குள்ள ஐ.நா. அலுவலகம் மறுத்துள்ளது.

குறித்த அதிகாரிகளின் பதவிக் காலம் இந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில் அவர்களுக்கு 3மாத கால சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அரசு தயாராக இருந்தது.  நியுயோர்க்கிலுள்ள ஐ.நா. நிரந்தர பிரதிநிதிகள் அலுவலகத்தில், அவர்கள் தொடர்பான மனித உரிமைகள் செயற்பாட்டு அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பொலிசாருக்கு சேவை நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது.