நியூசிலாந்து செல்ல முயன்ற 243 தமிழர்கள் மாயம்

கடந்த ஜனவரி மாதம் இந்தியா கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்து புறப்பட்டுச் சென்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லையென, அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் ஈழத் தமிழர்களாவர். இவர்களின் நிலை குறித்து அறிய மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்து வரும் கேரள அரசு, இவர்களை நியூசிலாந்து அனுப்ப உதவி செய்த 10பேரை கைது செய்துள்ளதாகவும், மூன்று பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.