நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் உதவியை நாடியுள்ளது ஹைட்டி (Haiti) அரசு.
ஹைட்டி அதிபர் ஜோவானெல் மோசே கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளி நாட்டவர்களின் சதி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹைட்டியில் நிலவும் பதற்றமான சூழல் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஹைட்டியில் பதற்றத்தை குறைக்கவும், துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாக்கவும் அமெரிக்கா மற்றும் ஐ.நா. தங்களது பாதுகாப்பு வீரர்களை அனுப்ப வேண்டும் என ஹைட்டி அரசு கேட்டுள்ளது.