26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் மகேந்திரன்

உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்ததாக கைதான பலர் விடுவிக்கப்பட்டபோதும், இறுதிப் போருக்கு முன்னர் கைதான பலர் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.

இறுதிப் போரின் போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் 12ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், விளக்க மறியலில் உள்ளவர்களும் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றும் போது, நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவர் பற்றி குறிப்பிட்டார்.