சர்ச்சையில் சிக்கிய வடமாகாண ஆளுநர்

வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சட்டத்திற்கு முரணானதாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணியினரின் செய்தியாளர் சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர் ஒருவர், வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொடர்பாக பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு என்பது ஆயுதக்குழுவாகும். ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்கு முரணாகும். ஆவா குழுவை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.