இன்று உலக அகதிகள் தினம்: 8.2 கோடி மக்கள் இடம்பெயர்திருப்பதாக ஐ.நா தகவல்

போர், அச்சுறுத்தல், மோசமான மனித உரிமை சூழ்நிலை காரணமாக உலகெங்கும் கடந்த 10 ஆண்டுகளில் தங்களது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் 8.24 கோடியாக அதிகரித்துள்ளது.

இதில் 4.8 கோடி மக்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்திருக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் அவையின் சமீபத்தில் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.