முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

மட்டக்களப்பில் கடந்த மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேருக்குமான வழக்கு 30ம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை அனுஸ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 02 பெண்கள் உட்பட 10 பேருக்குமான வழக்கு இன்று வாழைச்சேனை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிரந்த நீதிவான் விடுப்பில் இருந்ததால் அவ்வழக்கானது எதிா்வரும் 30ம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு பெண்கள் தொடா்பாக மேலதிக அறிக்கையை சமா்ப்பிக்கும்படி கடந்த தவணையில் நீதிபதி தெரிவித்திருந்த போதும் இன்றைய தினம்  காவல்துறையினர் அவ் அறிக்கையை சமா்ப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.