சட்டவிரோதமாக குடியேறிகள் நுழைவதைத் தடுக்க மலேசியா நடவடிக்கை

கொரோனா பெருந்தொற்றின் தொடர் சங்கிலியை முறிக்க சட்டவிரோதமாக குடியேறிகள் நுழையக்கூடிய விதத்தில் நாடெங்கும் உள்ள 111 நுழைவு வழிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்திருக்கிறார்.

இந்த 111 நுழைவு வழிகள் என்பது 54 கடல் வழிகளையும் 29 விமான வழிகளையும் 28 வழிகளையும் குறிக்கிறது. போலியான பாஸ்களை கொண்டு வெளிநாட்டினர் நுழைவதைத் தடுக்க பாஸ்களில் உள்ள QR Code முறையாக பரிசோதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.