அவுஸ்திரேலியாவுக்குள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் சமூக தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம், இது தற்காலிக முடிவு என்றே ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அறிவித்திருக்கிறார். இக்குடும்பம் நீண்ட காலம் எங்கு வசிப்பது தொடர்பான இறுதி முடிவு எதனையும் அவுஸ்திரேலிய அரசு தெரிவிக்கவில்லை.