பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்திய – இலங்கை பேச்சுக்கள்

பாதுகாப்புத்துறையில் இலங்கை இந்தியா இடையிலான ஒத்துழைப்பை வலுவாக்குதல் குறித்து பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளுடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே நேற்று பேச்சுவார்ததைகளை மேற்கொண்டிருந்தார்.

பிராந்தியத்திலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இப்பேச்சுக்களின் போது ஆராயப்பட்டது.