கப்பல் தீ விபத்து – மன்னாரில் கரையொதுங்கும் கழிவுப் பொருட்கள்

கடந்த வாரம் கொழும்புப் பகுதியில் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கிய கப்பலின் கழிவு பொருட்கள் மன்னார் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன.

May be an image of outdoors

கடந்த வாரம் இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் தீபற்றிய நிலையில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான கழிவு பொருட்கள் என்று சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.