20 அவுஸ்திரேலிய புலனாய்வு அதிகாரிகள் சிறிலங்காவிற்குள்

ஏப்ரல் 21  பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த விசாரணையில், சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக 20இற்கும் அதிகமான அவுஸ்திரேலிய புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்றை அவுஸ்திரேலியா சிறிலங்காவிற்கு அனுப்பியுள்ளது.

சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் செவ்வாய் அன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகவலைத் தெரிவித்தார்.

விசேடமாக தடயவியல் தொடர்பான உதவிகளை அவர்கள் வழங்கி வருவதாக அறியமுடிகின்றது.  சிறிலங்காவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் இப்பணிகளை ஒழுங்கமைத்துள்ளது.

இதேவேளை இரு நாடுகளுக்குமிடையிலான புலனாய்வுத் தகவல்களையும் தாங்கள் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.