பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம்

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய உட்துறை அமைச்சுக்கு 90 நாட்கள் கால அவகாசத்தை சிறப்புத் தீர்ப்பாயம் வழங்கியிருந்தது.

இந்தக் காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தும் வகையில்,‘தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE BAN)’ எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான (Wales to Westminster – W2W) இந்த மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கபட்டுள்ளது.