குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பொய்த் தகவல் கொடுத்த 23 வயது பெண் கைது

டங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவல் ஒன்றைக் கொடுத்த 23 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 மூலம் இந்தத் தகவலை அவர் பொலிஸாருக்குக் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறிப்பிட்ட பெண்ணை டங்கொட்டுவ பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

டங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக ஒரு குழுவினர் கொழும்பிலிருந்து டங்கொட்டுவ பகுதியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட பெண் பொலிஸாருக்குக் கொடுத்த தகவலில் தெரிவித்திருந்தார்.