யாழ்.மாவட்டத்திலிருந்து கடந்த 3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இன்னும் காணக்கூடியதாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கோவிட் தொற்றின்போது பொது மக்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்குவதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் மற்றும் விமானப்படையினர் செய்த சேவையையும் இராணுவ தளபதி இதன்போது பாராட்டியுள்ளார்.