இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: இது வரையில்113 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வெள்ளப்பெருக்கு இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிழக்கு Flores தீவில் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஓயாங் பயாங் கிராமத்தில்    நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலர் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.