இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 513 பேர் பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில்,  இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,85,509 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,64,623 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 7,59,79,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.