சிறிலங்கா கடவுச்சீட்டு கட்டண முறையில் மாற்றம்

சிறிலங்காவிற்கான கடவுச்சீட்டினைப் பெறுவதற்கான கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக சாதாரண சேவைக்கு வசூலிக்கப்பட்ட தொகை 3,000 ரூபாவிலிருந்து 3,500ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை ஒருநாள் சேவையில் பெறும் கட்டணம் 10,000ரூபாவிலிருந்து 10,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று வருட காலப்பகுதி கடவுச்சீட்டுகள் வழங்குவதற்கான கட்டணம் 2,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஒருநாள் சேவை கடவுச்சீட்டு வழங்கும் கட்டணம் 500ரூபாவிலிருந்து 1,000ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.