ஐ.நா உதவிப் பொதுச் செயலாளராக இந்தியப் பெண்

ஐ.நா உதவிப் பொதுச் செயலாளராக இந்திய பெண் அனிதா பாட்டியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஆகியற்றிற்கான உதவிப் பொதுச் செயலாளராக செயற்படுவார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அறிவித்துள்ளார்.

ஐ.நா வின் மிக மதிப்பு மிக்க நட்பு நாடு இந்தியா என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.