சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜேன் கொஸ்ரட்செதர் சிறிலங்காவின் தென் மாகணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அங்கு அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் மற்றும் தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.
தனது விஜயத்தின் போது பிரதேச பௌத்த, கத்தோலிக்க இஸ்லாமிய மதத் தலைவர்களையும், பெண் தலைமைத்துவ குடும்பத் தலைவிகளையும் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் துறைமுக நிறைவேற்று அதிகாரியையும் சந்தித்து கலந்துரையாடினார்.