அவுஸ்திரேலியா: தமிழ் இளைஞருக்கு மோசடி வழக்கில் சிறைத்தண்டனை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழும் தமிழ் இளைஞருக்கு மோசடி வழக்கில் பிரிஸ்பன் நீதிமன்றம் சிறைத்தண்டனை தீர்ப்பளித்துள்ளதாக Sunday Mail செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் பின்னணி கொண்ட செல்வராஜா என்ற 30 வயது புகலிடக்கோரிக்கையாளரான இவர் சுமார் 30 மாணவர்களின் தொலைபேசிகளை அவர்களிடமிருந்து ஏமாற்றிப்பெற்று அதனூடாக பணமீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாணவர் விசாவில் இருந்துகொண்டு வேலைவாய்ப்புக்காக தேடியலையும் மாணவர்களை வலைவீசிப்பிடித்து அவர்களது தொலைபேசியில் செயலி ஒன்றை பதிவேற்றித் தருவதாகக்கூறி அதனைப்பெற்றுச் செல்லும் இவர் தொலைபேசியைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றிவிடுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது