இந்திய மீனவர்கள் 17 பேர் பாகிஸ்தான்  கடற்படையால் கைது

அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ம் திகதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர், மீனவர்கள் 17 பேரும் தங்கள் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக கூறி, அவர்களை திரும்பிச்செல்லுமாறு எச்சரித்துள்ளனர்.

ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீனவர்கள் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அங்கேயே மீன்பிடித்துக்கொண்டு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,  17 மீனவர்களையும் கைது செய்த பாகிஸ்தான் அதிகாரிகள், அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 இவ்வாறு அரபிக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள், பல மாதங்களாக பாகிஸ்தான் சிறையில் வாடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.