கொரோனா தடுப்பூசியில் சமநிலையின்மை? பெரிதும் பாதிக்கப்படும் இடத்தில் அகதிகள்

உலகெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டங்கள் பரவலாக நடந்து வரும் நிலையில், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர அகதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், அகதிகளை பெரும் எண்ணிக்கையில் கொண்டுள்ள ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட நாடுகள் அகதிகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.

அதே சமயம், ஏழ்மையான நாடுகளில் வாழும் 10ல் 9பேருக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை உள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசியில் நிலவும் சமநிலையின்மைக் காரணமாக அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.