காரைநகரில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க அளவீடு – தடுத்துநிறுத்த தயாராகும் மக்கள்

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படைத் தளத்துக்கு காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டுப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.

வலந்தலை, ஜே – 47 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள அரை ஏக்கர் காணியே கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளது. காரைநகர் எலாரா கடற்படைத் தளத்துக்கு சுவீகரிக்கப்படவுள்ள இந்தக் காணியின் அளவீட்டுப் பணிகள் இன்று காலை 8.30 மணிக்கு நிலஅளவை திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

காரைநகர் இந்துமகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான இந்தக்காணியை சுவீகரிப்பதற்கு எதிராக இன்று பிரதேச மக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.