சரத் வீரசேகர நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் – விக்னேஸ்வரன்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அவர் கூறியபடி சட்டநடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் அது குறித்து நீதிமன்றில் சந்திக்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகர சட்ட நடவடிக்கை எடுத்தால் தான் அதை வரவேற்பதாகவும், இதன்மூலம் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் தங்களுக்கு ஏற்படும் என்றும் .எனவிக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்டவையே எனவும், வெறுமனே அவர்கள் நினைத்ததுபோன்று தங்களைக் குற்றஞ்சாட்ட முடியாது என்றும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்..