குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்பு

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

2 2 குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்பு

கடந்த மாதம் 18ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர் மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

3 1 குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்பு

அதனைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தோடு இராணுவம் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இந்த சந்தேகத்துக்கிடமான சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் இது சிவலிங்கமா அல்லது வேறு தொல்லியல் சிதைவுகளா என்பது குறித்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.