கொல்கொத்தா ஏயார் ஏஷியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா கொல்கொத்தா விமான நிலையத்திலுள்ள எயார் ஏஷியா விமானத்தில்  (ஐ 5 – 585) வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விமானத்தினை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிவித்தல் பெங்களுர் விமான நிலையத்திற்கே வந்தது. இந்த அறிவித்தல் கொல்கொத்தாவிற்கு அனுப்பப்பட்டது. இதேவேளை இந்த விமானத்தில் 179 பயணிகள் ஏறி, விமானம் கொல்கொத்தா நோக்கி புறப்பட்டு விட்டது.

கொல்கொத்தாவில் விமானம் தனியாக நிறுத்தப்பட்டதும், விமானத்தை சுற்றிவளைத்த CSIF  பாதுகாப்பு வீரர்கள் விமானத்தை சுற்றிவளைத்து, அதிலிருந்த 179 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.

CSIF வீரர்கள் விமானத்திற்குள் ஏறி கடுமையான சோதனையை மேற்கொண்டனர். சோதனை முடிவுகள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை.