இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி, தமிழக மீனவர்களின் படகு மூழ்கியது, இந்த சம்பவத்தில் அதில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில்,குறித்த 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியிருந்த நிலையில், யாழ் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.