முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பிரஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்

சிறீலங்கா அரசும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து கடந்த சனிக்கிழமை (9) முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அழித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமகாக பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு François Pupponi தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசினதும், யாழ் பல்கலைக்கழகத்தினதும் இந்த கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்புக்கள் தோன்றியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.