முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தை இடித்தது வேதனையானது – போட்

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சிறீலங்கா அரசு இடித்தது மிகவும் வேதனையானது என கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் அரசியல் பிரமுகரும், பிரபல வர்த்தகருமான டோவ் போட் தெரிவித்தள்ளார்.

சிறீலங்கா அரசும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து கடந்த சனிக்கிழமை (9) முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அழித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமகாக அவர் தனது ருவிட்டர் தளத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.