என்னை மேலும் வேதனைக்குள்ளாக்காதீர்கள் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் முன்னதாக அறிவித்திருந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார்.

இந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் பெரும் திரளான இரசிகர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி  மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.