இலங்கையில் கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது வரையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 619ஆக அதிகரித்துள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இது வரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 826 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 36 ஆயிரத்து 155 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும், 7,260 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.