அவுஸ்திரேலியாவின் கொள்கையால் பெற்றோரை பிரியும் குழந்தைகள்

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்து நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்ட அகதிகளுக்குப் பிறந்த சுமார் 170 குழந்தைகள் நிச்சயமற்ற நிலையை எதிர் நோக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நவுரு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சுமார் 7 ஆண்டு காலத்தில் பிறந்த இக் குழந்தைகள் அவுஸ்திரேலிய படகு கொள்கையினால் நாடற்ற நிலையை எதிர் நோக்கியுள்ளனர்.

சில குழந்தைகள் தங்களது (அகதி) பெற்றோரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்திருக்க வேண்டிய சூழலும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.